நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) அவர்கள் கலந்துகொண்டதுடன் மாநகரசபை பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கினணப்புக் குழு தலைவரது பிரத்தியேக உதவியாளர், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம், பிரதேசத்தின் தேவைப்பாடுகள் மேலும் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல ஆக்கபூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
 
d1 d2 d3 d4 d5
d6 d8
FaLang translation system by Faboba
Scroll To Top