இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உ.யசோதா அவர்களின் தலைமையில் புதுவருடத்திற்கான ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பில் சிறப்பான பங்களிப்பினை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கப்பட்டதுடன் அலுவலகத்திற்கு விடுமுறையினை குறைவாகப் பெற்று வரவினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் வெற்றிகளுக்காக கௌரவிக்கப்பட்டு தொடர்ந்து சமூக பாதுகாப்பு சபைக்கான சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவான சேமிப்புகளை சேகரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



















